அன்னூரில் அவிநாசி அத்திகடவு திட்டக் குழாய் உடைப்பு: வீணாகும் தண்ணீர்

அன்னூர் அருகே அல்லிக்குளம் ஊராட்சியில் அவிநாசி அத்திகடவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக புகார். விவசாயிகள் தரமான குழாய்கள் அமைக்க கோரிக்கை.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அல்லிக்குளம் ஊராட்சியில் அவிநாசி அத்திகடவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக புகார் எழுந்துள்ளது.

அல்லிக்குளம் ஊராட்சியில் உள்ள அல்லி குளம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தில் அண்மையில் அவிநாசி அத்திகடவு திட்டம் மூலம் தண்ணீர் நிரப்ப குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது.

திட்டம் நிறைவேற்றப்பட்டு குளத்திற்கு தண்ணீர் வர தொடங்கி ஒரு மாதத்திற்குள் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடித்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் தண்ணீர் சாலைகளிலும் வீணாக செல்கிறது. தரமான குழாய்கள் பதிலாக சாதாரண குழாய்கள் அமைக்கப்பட்டதால் அவ்வப்போது இந்த திட்டத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.

நீண்ட நாட்களாக எப்போது தண்ணீர் வரும் என காத்திருந்த நிலையில், தற்போது வரும் தண்ணீரும் வீணாவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தரமற்ற முறையில் உள்ள குழாய்களை மாற்றி தண்ணீர் வீணாவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தற்போது அல்லி குளம் பகுதியில் குழாய் உடைப்பின் வீடியோ காட்சிகள் அந்த கிராம மக்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த புகார்களை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...