கோவை கவுண்டம்பாளையத்தில் தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம்: 2026 தேர்தலுக்கான தயார்நிலை வலியுறுத்தல்

கோவை கவுண்டம்பாளையத்தில் தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற தீவிர செயல்பாடு தேவை என வலியுறுத்தப்பட்டது.


Coimbatore: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தி.மு.க சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடந்தேறியது.

கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி கலந்து கொண்டார். அவர் தனது உரையில், "2026 சட்டமன்ற தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் அனைத்து தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இப்போது இருந்தே தீவிரமாக செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



கூட்டத்தில் தி.மு.கழக மூத்த உறுப்பினர்களுக்கு கேடையம் வழங்கி பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது. முன்னாள் எம்.பி. நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் TP சுப்பிரமணியன், மாநில மகளிரணி துணை செயலாளர் மாலதி நாகராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் சுந்தரம், முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் ஜவஹர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



மேலும், அவைத் தலைவர் சண்முகசுந்தரம், துணை செயலாளர்கள் சங்கர், ஈஸ்வரன், கண்ணகி, பொருளாளர் வசந்தகுமார், மாவட்ட பிரதிநிதிகள் லோகநாதன், கல்யாணசுந்தரம், சுனில்குமார், பிரபாகரன், வட்ட செயலாளர்கள் குட்டி வேலுச்சாமி, ரமணன், தனராஜ், காளிதாஸ், குமரேசன், மாமன்ற உறுப்பினர்கள் தமிழ்செல்வன், சுபஸ்ரீ சரத், கிருஷ்ணமூர்த்தி, சம்பத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் அ.தி.மு.க நகர மாணவர் அணி இணை செயலாளர் கனகராஜ் தி.மு.கவில் அனைவர் முன்னிலையிலும் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிகழ்வு கட்சியின் வளர்ச்சியையும், அடுத்த தேர்தலுக்கான தயார்நிலையையும் காட்டுவதாக அமைந்தது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...