உடுமலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

உடுமலையில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிஜிட்டல் கிராப் சர்வே பணி தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



திருப்பூர்: உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கிராம முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் பால்வாசகம் மற்றும் வட்ட தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். சங்கத்தின் செயலாளர் வெற்றிவேல் மற்றும் பொருளாளர் சையது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள், டிஜிட்டல் கிராப் சர்வே பணி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, இப்பணிக்கான உபகரணங்கள் மற்றும் மதிப்பூதியம் வழங்கப்படாதது குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், கிராப் சர்வே பணிக்கென தன்னார்வலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காததையும் அவர்கள் கடுமையாக கண்டித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் தலைவர் ரவி, செயலாளர் சீனிப்பாண்டி உள்ளிட்ட பல கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...