கோவை மாநகராட்சி பள்ளியில் மாணவர் தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர் தலைவர் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் நடைபெற்றது. 550 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் வாக்களித்தனர்.



கோவை: கோயம்புத்தூர், மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளி மாணவர் தலைவர் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலமாக நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 9 மாணவர்கள் வேட்பாளராக போட்டியிட்டனர். மொத்தம் 550 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் வாக்களித்தனர்.

மசக்காளிபாளையம் பள்ளியில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கோயம்புத்தூர் ராக் அமைப்பின் நிதி உதவியுடன் வடிவமைக்கப்பட்டது. கடந்த வாரத்திலேயே மாணவர்களுக்கு இதில் வாக்களிக்கும் முறை விளக்கப்பட்டது.

இந்த தேர்தல் முறை மூலம் மாணவர்கள் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும் வழிமுறைகளை அறிவதோடு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் எவ்வாறு செயல்படுகிறது, எவ்வாறு வாக்களிப்பது போன்ற வழிமுறைகளையும் அறிந்து கொள்கின்றனர்.



எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான 500க்கும் மேலான மாணவர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மாணவர்களே செயல்பட்டனர். வேட்புமனுத் தாக்கல், பிரச்சாரம் என அனைத்துமே பொதுத்தேர்தலில் இருப்பது போல கடைப்பிடிக்கப்பட்டன.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...