கோவை மாநகராட்சி ஆணையர் கிழக்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் கிழக்கு மண்டலத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 09.09.2024 அன்று நேரில் ஆய்வு செய்தார். நகர்ப்புற சுகாதார நிலையம், பொது கழிவறை, தங்கும் விடுதி உள்ளிட்ட பல திட்டங்களை பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், 09.09.2024 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டலம் வார்டு எண் 54க்குட்பட்ட நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் 15வது மத்திய குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகர்ப்புற சுகாதார நிலையத்தையும்,



வார்டு எண் 24க்குட்பட்ட கெகசியா பகுதியில் தூய்மை இந்தியா (2.0) திட்டத்தின்கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் பொது கழிவறையையும் பார்வையிட்டார்.



வார்டு எண் 57க்குட்பட்ட பட்டனம் சாலை, காமராஜர் நகரில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வீடற்றோருக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டு வருவதையும் ஆணையர் ஆய்வு செய்தார்.



பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.





அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 57க்குட்பட்ட ஓண்டிப்புதூர், சிந்து நகரில் செயல்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மை மையத்தை ஆய்வு செய்த ஆணையர், மக்காத குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதே வளாகத்தில் செயல்படும் வீடில்லா நாய்களின் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டார்.



வார்டு எண் 8க்குட்பட்ட காளப்பட்டி, சரவணம்பட்டி சாலை முதல் என்.ஜி.பி. கல்லூரி வரை 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின்கீழ் புதிய இணைப்புச் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டார்.





வார்டு எண் 61க்குட்பட்ட சிங்காநல்லூர், ஆணையங்காடு சாலை பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகர்ப்புற நல வாழ்வு மையம், அங்கன்வாடி மையம், மற்றும் திருச்சி சாலை, சிங்காநல்லூர் குளத்தின் வளாகத்தில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றையும் ஆணையர் ஆய்வு செய்தார்.





இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர்கள் பாக்கியம், விஜயகுமார், சாந்தாமணி, உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் கணேசன், குமார், முத்துக்குமார், ஜெகதீஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் ஜீவமுருகராஜ், முருகேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...