பொள்ளாச்சி திஷா இன்டர்னேஷனல் பள்ளியில் தேசிய அளவிலான டேக் வின்டோ போட்டி: 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி அருகே உள்ள திஷா இன்டர்னேஷனல் மேல்நிலைப்பள்ளியில் CISCE பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான டேக் வின்டோ போட்டிகள் நடைபெற்றன. 13 மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியில் செயல்பட்டு வரும் திஷா இன்டர்னேஷனல் மேல்நிலைப்பள்ளியில் CISCE பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான டேக் வின்டோ போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், பீகார், ஒடிசா, பாண்டிச்சேரி உள்ளிட்ட 13 மாநிலங்களின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகள் 14, 17, 19 வயதினருக்கு தனித்தனியாக 69 பிரிவுகளில் நாக்-அவுட் முறையில் நடைபெற்றன. முதல் முறையாக சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் செயல்படுத்தப்படும் PSS முறையில் சென்சார் மூலம் பதிவு செய்யப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.



இப்போட்டிகளில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெறும் மாணவ, மாணவிகள் மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து டேக் வின்டோ பயிற்சியாளர் கோதண்டன் கூறுகையில், "இப்போட்டிகள் மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் தன்னம்பிக்கையையும் வளர்க்கின்றன. சர்வதேச தரத்திலான போட்டிகளில் பங்கேற்பதற்கு இது ஒரு சிறந்த தளமாக அமைகிறது," என்றார்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...