'பிரேமம்' திரைப்பட புகழ் நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணனும் திரைபட துறையில் களமிறங்குகிறார்.


பிரேமம் திரைப்பட புகழ் நடிகை சாய்பல்லவியின்  தங்கை பூஜா கண்ணனும் திரைபட துறையில் களமிறங்குகிறார்.மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி,படத்தின் வெற்றி மற்றும் அவரது நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாய் மலையாளத்தில் திரைபடங்களில் பிசியாக உள்ளார். மலையாளத்தில் தமிழ் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சாய் பல்லவி, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் கோலிவுட்டில் களமிறங்க உள்ளார். இதன் முன்னோட்டமாக பூஜா கண்ணன் நாயகியாக நடித்த கரா என்ற குறும்படம் இன்று யுடியுப்பில் வெளியிடப்பட்டது. 

கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட இந்த குறும்படத்தை பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பார்த்தனர்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூஜா கண்ணன்,கோவையில்  தனியார் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்து வருவதாகவும் அக்கா சாய் பல்லவி சினிமா துறையில் இருப்பதை தொடர்ந்து தனக்கும் பட வாய்ப்புகள் வருவதாக கூறியவர் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறிய பூஜா கண்ணன், நல்ல கதையுடன் கூடிய பட வாய்ப்புகள் வந்தால் தற்போதே படங்களில் நடிக்க ரெடியாக இருப்பதாக தெரிவித்தார்.கோவையை சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கியுள்ள இந்த கரா குறும்படத்தை, ஆஜித் என்ற இளைஞர் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...