கோவை பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாட்டம்

கோவை துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.



Coimbatore: கோவை துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்து அமைப்புகள் சார்பாக மகாராஜா விநாயகர், சிங்க விநாயகர், அன்னபறவை விநாயகர், மாப்பிள்ளை விநாயகர், மயில் விநாயகர், நீர் வீழ்ச்சி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் ஒரு பகுதியாக, கோவையின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. ரங்கம்மாள் காலனி, வெள்ளகிணர், உருமாண்டம்பாளையம், தடாகம், கணுவாய், பன்னிமடை, கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக விழா கொண்டாடப்பட்டது.



நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் ராஜஸ்தானி அரண்மனை போன்ற அலங்கார அமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் வாராகி மணிகண்ட சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, தக்காளி சாதம், புளி சாதம் உள்ளிட்ட உணவு வகைகள் அன்னதானமாக வழங்கப்பட்டன. ஹிந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா, பாரத் சேனா, விவேகானந்தர் இளைஞர் பேரவை, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்த கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...