அன்னூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் வீட்டில் விநாயகர் சிலை பிரதிஷ்டை: அர்ஜுன் சம்பத் பங்கேற்பு

அன்னூரில் பொது இடத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் வீட்டில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அர்ஜுன் சம்பத் பங்கேற்றார்.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பொது இடத்தில் விநாயகர் சிலை வைக்க இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டில் சிலையை பிரதிஷ்டை செய்தார் அர்ஜுன் சம்பத்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அன்னூர் பகுதியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கடிதம் கொடுத்து வந்தனர். ஆனால், புதிதாக எந்த இடத்திலும் விநாயகர் சிலை வைக்க அரசு அனுமதிக்கவில்லை என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டது.



இதனை எதிர்த்து, கடந்த வாரம் அன்னூர் பேருந்து நிலையம் முன்பு அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தில் இந்து மக்கள் கட்சியிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விநாயகர் சதுர்த்தி நாள் வரை அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி குட்டி ராஜேந்திரனின் வீடு அமைந்துள்ள அன்னூர் ஏ எம் பாளையம் பகுதியில், அவரது வீட்டில் ஆறு அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலைக்கு வழிபாடு நடத்தப்படும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்தால் அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய அன்னூர் போலீசார் திட்டமிட்டிருந்த நிலையில், வீட்டிலேயே சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதால் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...