கோவையில் 11, 12 தேதிகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

கோவையில் வரும் 11, 12 தேதிகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் கூட்டமைப்பு ஆலோசனை, மகளிர் நலத்திட்டங்கள் துவக்க விழா மற்றும் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.


கோவை: கோவையில் வரும் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.

11ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக அரங்கில் பல்வேறு தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்துகிறார்.

12ஆம் தேதி காலை 10:00 மணியளவில் ஹிந்துஸ்தான் கல்லூரி அரங்கில் மத்திய மகளிர் நலத்திட்டங்கள் துவக்க விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்கும் மத்திய நிதி அமைச்சர், 1,500 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்குகிறார்.

அதே நாள் மாலையில் பா.ஜ.க கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு காளப்பட்டி கெட்டிமேளம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் 25,000 புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைய உள்ளனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...