சிறுமுகை அருகே பவானி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வச்சினம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வச்சினம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிடைத்த விவரங்களின்படி, சிறுமுகை அருகே உள்ள வச்சினம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றில் சடலம் ஒன்று மிதந்து வருவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக இது குறித்து சிறுமுகை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



தகவல் அறிந்த சிறுமுகை காவல்துறையினர் மற்றும் லைப் காட் பிரிவு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஆற்றில் மிதந்து வந்த சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்ட சடலம் யாருடையது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் உயிரிழந்தாரா என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் இல்லை.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமுகை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலத்தின் அடையாளத்தை கண்டறியவும், மரணத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...