மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி: துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பாதுகாப்பு பேரணி

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடி படையினரும் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை, அன்னூர் போன்ற பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனிக்கிழமை பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று பவானி ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.



மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில் அதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.



விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் தலைமையில் கொடி அணிவகுப்பு மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.



மேட்டுப்பாளையம் கோ-ஆபரேட்டிவ் காலனி பகுதியில் இருந்து காவல் நிலையம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.



சட்டம் ஒழுங்கு போலீசார், அதிரடி படையினர், ஊர்க்காவல் படையினர் போலீசார் இந்த பேரணியில் பங்கேற்றததுடன் சிறப்பு அதிரடி படையினர் கையில் துப்பாக்கி ஏந்தி பங்கேற்றனர்.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...