அன்னூர் அருகே தனிநபர் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

அன்னூர் அருகே பசூர் ஊராட்சி அம்மா செட்டி புதூர் கிராமத்தில் தனிநபர் ஒருவர் சாலை மற்றும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைப்பதை கண்டித்து ஊர் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர் ஊராட்சி அம்மா செட்டி புதூர் பகுதியில் தனிநபர் ஒருவர் சாலை மற்றும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைப்பதை கண்டித்து ஊர் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அம்மா செட்டி புதூர் பகுதி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ள பகுதியாக திகழ்கிறது. இது கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியாகவும் உள்ளது. அண்மையில் இங்கு இடம் வாங்கிய தொழிலதிபர் காஸ்டிங் அல்லது இரும்பு ஆலை ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.



ஆலைக்கு முன்னோட்டமாக ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஊராட்சிக்கு சொந்தமான சாலை மற்றும் சாலை ஓரத்தில் உள்ள நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவரை அமைப்பதாக குற்றம்சாட்டி அம்மா செட்டி புதூர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலம் காலமாக கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சாலையையும், மழை காலங்களில் மழை நீர் வழிந்தோடும் நீர் வழிப்பாதையையும் ஆக்கிரமிப்பு செய்து தனியார் ஒருவர் லாப நோக்கில் செயல்படுவதை தடுக்க வலியுறுத்தி கட்டுமான பணிகளை தடுக்கும் நோக்கில் கட்டுமானங்களுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சுற்றுச்சுவர் அமைக்க சட்டவிரோதமாக சுமார் 20 அடிக்கும் மேல் திறந்த வெளியில் ஆழ்குழாய் கிணறு போன்று குழிகள் அமைக்கப்பட்டுள்ளதால் கால்நடை வளர்ப்போர் மற்றும் குழந்தைகள் வைத்திருப்போர் அச்சமடைந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...