கோவை: அரசூர், கல்லிமடை, கதிர்நாயக்கன்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை

கோவை மாவட்டத்தில் அரசூர், கல்லிமடை, கதிர்நாயக்கன்பாளையம் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்டம்பர் 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் அரசூர், கல்லிமடை, கதிர்நாயக்கன்பாளையம் ஆகிய மூன்று துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (செப்டம்பர் 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசூர் துணைமின் நிலையத்தின் கீழ் உள்ள அரசூர், பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், நீலம்பூர் பகுதி, ஊத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கல்லிமடை துணைமின் நிலையத்தின் கீழ் உள்ள கல்லிமடை, பாலன் நகர், வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, சர்க்கரை செட்டியார் நகர், மசக்காளிபாளையம், காமராஜ் சாலை, உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கதிர்நாயக்கன்பாளையம் துணைமின் நிலையத்தின் கீழ் உள்ள கதிர்நாயக்கன்பாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம், பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இந்த மின்தடை காரணமாக பாதிக்கப்படும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...