கோவையில் வக்கீல் மகளைக் கடத்த முயன்ற இருவர் கைது

கோவை ரயில் நிலைய சாலையில் உள்ள ஓட்டலில் வக்கீல் குடும்பத்தினர் உணவருந்திக் கொண்டிருந்தபோது, இரு நபர்கள் வக்கீலின் மகளைக் கடத்த முயன்றனர். பொதுமக்கள் உதவியுடன் சம்பவ இடத்திலேயே இருவரும் பிடிபட்டனர்.


Coimbatore: கோவை அருகே உள்ள இருகூர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த வக்கீல் பிரவீன் குமார் (41), அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கோவை ரயில் நிலைய சாலையில் உள்ள ஓட்டலில் உணவருந்தச் சென்றனர். உணவருந்திய பின், பிரவீன் குமார் ஓட்டலுக்கு வெளியே ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது மனைவியும் மகளும் கழிவறைக்குச் சென்றனர்.

அப்போது, அங்கு வந்த இரு நபர்கள் பிரவீன் குமாரின் மகளைக் கடத்த முயன்றனர். இதைக் கண்ட அவரது மனைவி உடனடியாக சத்தமிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த பிரவீன் குமார், பொதுமக்களின் உதவியுடன் அந்த இருவரையும் பிடித்து கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார் தலைமையிலான காவல்துறையினர் அந்த இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கோவை புதூர் குளத்துப்பாளையம் அம்மாவாசை கவுண்டர் வீதியைச் சேர்ந்த மணிவண்ணன் (30) மற்றும் பத்மநாபன் (30) என்பது தெரியவந்தது.

தற்போது இவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...