மதுக்கரையில் இன்ஜினியரிங் நிறுவனத்தில் கொள்ளை: இரண்டு பேர் கைது

மதுக்கரையில் உள்ள இன்ஜினியரிங் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அசீம் மணிகுண்ணன் (35) என்பவர் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். செப்டம்பர் 2 ஆம் தேதி, நிறுவனத்தின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அசீம் மணிகுண்ணன், சூப்பர்வைசர் மகேந்திரன், மற்றும் மசூத் ஆகியோர் உள்ளே சென்று பார்த்தபோது, வெல்டிங் இயந்திரம், கிரைண்டிங் இயந்திரம் உள்ளிட்ட சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அசீம் மணிகுண்ணன் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த டிரைவர் நாகூர்தீன் (30) மற்றும் சுந்தராபுரம் காமராஜ் நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் (56) என்பது தெரியவந்தது.

இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் நாகூர்தீன் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...