தரம் பிரிக்காத குப்பைகளை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


வெள்ளலூர் குப்பை கிடங்கில் தரம் பிரிக்காமல் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளினால் பல்வேறு தீமைகள் ஏற்பட்டு வருகின்றன என பசுமைத் தீர்ப்பாயத்தில் மதிமுக கோவை மாவட்ட இளைஞரணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், இதுகுறித்து நீதிபதி பி.ஜோதிமணி மற்றும் எக்ஸ்பெர்ட் மெம்பர் பி.எஸ்.ராவ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நீர் மாதிரி சோதனை முடிவுகளும், நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது குறித்தான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக தரம் பிரிக்காமல் கொட்டப்பட்டு கிடக்கின்ற 19 லட்சம் டன் குப்பைகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் மதிமுக இளைஞரணி சார்பில் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, பி.எஸ்.ராவ் உடன் ஆலோசனை மேற்கொண்ட நீதிபதி பி.ஜோதிமணி, தரம் பிரிக்காமல் கொட்டப்பட்டிருக்கும் 19 லட்சம் டன் குப்பைகளை மூட உடனடியாக காலநிர்ணயத்துடன் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.  தினமும் சேகரமாகும் 1000 டன் குப்பையை கையாள பிரித்தெடுக்கும் திட்டத்தையும் அதை எப்போது நிறைவேற்றுவோம் என்பதற்கான அறிக்கையும் சமர்பிக்கப்பட வேண்டும். உடனடியாக மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 100 சதவிகிதம் கழிவுகளை பிரித்தெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தரம் பிரிக்காத குப்பைகளை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டக்கூடாது. பழைய குப்பைகளுடன் புதிய குப்பைகளை கலக்கக்கூடாது என உத்தரவு பிரப்பித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...