அன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்: பதிவு பணிகள் பாதிப்பு

கோவை மாவட்டம் அன்னூரில் தொழில் பேட்டை அமைக்க நில கையகப்படுத்தல் எதிர்ப்பில் விவசாயிகள் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன.

கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவில் நான்கு ஊராட்சிகளும், மேட்டுப்பாளையம் தாலுகாவில் இரண்டு ஊராட்சிகளும் உள்பட மொத்தம் ஆறு ஊராட்சிகளில் 3,850 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை அமைப்பதாக 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அறிவித்தது.

இந்த அறிவிப்பை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும், கடந்த வாரம் மூன்று நாட்கள் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தை அடுத்து மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை பத்திரப்பதிவு துவங்கியது.



இந்நிலையில், சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (செப்டம்பர் 2) விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 50 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...