கோவை உப்பிலிபாளையத்தில் பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம்: இன்ஜினியர் தற்கொலை

கோவை உப்பிலிபாளையத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்த 31 வயது இன்ஜினியர் மணிகண்டன், பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.


கோவை: கோவை உப்பிலிபாளையத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்த இன்ஜினியர் ஒருவர், பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள கருவலூர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் மணிகண்டன் (31), இன்ஜினியரிங் பட்டதாரி. திருமணமாகாத மணிகண்டன், கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவர் ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மணிகண்டன் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அவர் தங்கி இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். செப்டம்பர் 1 ஆம் தேதி கோவைக்கு விரைந்து வந்த பெற்றோர், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அறையைத் திறந்து பார்த்தபோது, மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு, கோவை ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மணிகண்டன் பங்குச்சந்தை முதலீட்டில் எவ்வளவு பணம் இழந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் உப்பிலிபாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...