கோவையில் தனியார் பள்ளிகளில் சாதி, மத விபரங்கள் கேட்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் சாதி, மத விபரங்களை கேட்பதாக தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகத் தலைவர் நேருதாஸ் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் சாதி மற்றும் மத விபரங்களை கேட்பதாக தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகத் தலைவர் நேருதாஸ் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

நேருதாஸ் தனது மனுவில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் விபரக் குறிப்பேட்டில் சாதி மற்றும் மத விபரங்களை குறிப்பிடுமாறு வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திடம் முறையிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



இந்த முறையீட்டின் அடிப்படையில், மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) 10.07.2023 அன்று ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், "குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்குத் தடையாக உள்ள சாதி, மதம் சார்ந்த அடையாளங்களை பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாட குறிப்பேடு மற்றும் சுய விவரப்படிவத்தில் இக்கல்வியாண்டு முதல் (2023-2024) குறிப்பிடக்கூடாது" என்று அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இந்த உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் தொடர்ந்து மாணவர்களின் சாதி மற்றும் மத விபரங்களை கேட்பது அதிர்ச்சி அளிப்பதாக நேருதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை அனைத்து தனியார் பள்ளிகளிலும் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீறும் பள்ளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேருதாஸ் தனது மனுவில் கோரியுள்ளார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...