கோவையில் அனுமதியின்றி இயங்கும் லாட்ஜ் மீது நடவடிக்கை கோரி பாஜக மனு: மேயர் மீது அரசியல் குற்றச்சாட்டு

கோவை ராமலட்சுமி நகரில் அனுமதியின்றி இயங்கும் ஐஸ்வர்யா லாட்ஜ் மீது நடவடிக்கை கோரி பாஜக மனு அளித்துள்ளது. மேயர் மீது அரசியல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை ராமலட்சுமி நகரில் இயங்கி வரும் ஐஸ்வர்யா லாட்ஜ் அனுமதியின்றி இயங்கி வருவதாகவும், அங்கு சில சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும் கூறி அந்த லாட்ஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக தொழில் பிரிவு மாநில துணைத்தலைவர் செல்வகுமார் ஊர் பொதுமக்கள் சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய செல்வகுமார், கோவை கோல்ட் விங்ஸ் பகுதியில் பழமை வாய்ந்த சிவன் கோவில் இருப்பதாகவும், இந்த கோவிலுக்கு அருகில் உள்ள ஐஸ்வர்யா லாட்ஜ் மாநகராட்சியிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். அந்த லாட்ஜில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.



மேலும், அந்த லாட்ஜின் உரிமையாளர் ஆளுங்கட்சியினரின் ஆதரவுடன் லாட்ஜின் வாகன வசதிக்காக இந்த கோவிலை இடிக்க முயற்சிப்பதாகவும், இதற்கு முன்பிருந்த கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இந்த கோவிலை இடிக்க முயற்சி செய்ததாகவும் கூறினார். தற்பொழுது உள்ள புதிய மேயரும் கோவிலை இடிக்க முயற்சிப்பதாகவும், இவ்விவகாரத்தில் பாஜக பொதுமக்களை திரட்டி போராடும் எனவும் கூறினார்.

அந்த லாட்ஜ் குறித்து ஆர்டிஐ செய்து பார்த்த பொழுது அனுமதி அளித்ததற்கான ஆவணங்கள் மாநகராட்சியிடம் இல்லை என்று பதில் தரப்பட்டதாக குறிப்பிட்டார். அந்த லாட்ஜை விற்றுக் கொடுத்தால் கமிஷன் கிடைக்கும் என்ற காரணத்திற்காக புதிய மேயர் கோவிலை இடிக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இது குறித்து அளிக்கப்பட்ட மனுவில் லாட்ஜ் இருப்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவிர அப்பகுதியில் கோவில் இருப்பதையோ மேயரின் தலையீட்டையோ கோவிலை இடிக்க முயற்சிப்பதையோ குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...