கோவையில் அனுமதியின்றி இயங்கும் லாட்ஜ் மீது நடவடிக்கை கோரி பாஜக மனு: மேயர் மீது அரசியல் குற்றச்சாட்டு

கோவை ராமலட்சுமி நகரில் அனுமதியின்றி இயங்கும் ஐஸ்வர்யா லாட்ஜ் மீது நடவடிக்கை கோரி பாஜக மனு அளித்துள்ளது. மேயர் மீது அரசியல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை ராமலட்சுமி நகரில் இயங்கி வரும் ஐஸ்வர்யா லாட்ஜ் அனுமதியின்றி இயங்கி வருவதாகவும், அங்கு சில சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும் கூறி அந்த லாட்ஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக தொழில் பிரிவு மாநில துணைத்தலைவர் செல்வகுமார் ஊர் பொதுமக்கள் சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய செல்வகுமார், கோவை கோல்ட் விங்ஸ் பகுதியில் பழமை வாய்ந்த சிவன் கோவில் இருப்பதாகவும், இந்த கோவிலுக்கு அருகில் உள்ள ஐஸ்வர்யா லாட்ஜ் மாநகராட்சியிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். அந்த லாட்ஜில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.



மேலும், அந்த லாட்ஜின் உரிமையாளர் ஆளுங்கட்சியினரின் ஆதரவுடன் லாட்ஜின் வாகன வசதிக்காக இந்த கோவிலை இடிக்க முயற்சிப்பதாகவும், இதற்கு முன்பிருந்த கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இந்த கோவிலை இடிக்க முயற்சி செய்ததாகவும் கூறினார். தற்பொழுது உள்ள புதிய மேயரும் கோவிலை இடிக்க முயற்சிப்பதாகவும், இவ்விவகாரத்தில் பாஜக பொதுமக்களை திரட்டி போராடும் எனவும் கூறினார்.

அந்த லாட்ஜ் குறித்து ஆர்டிஐ செய்து பார்த்த பொழுது அனுமதி அளித்ததற்கான ஆவணங்கள் மாநகராட்சியிடம் இல்லை என்று பதில் தரப்பட்டதாக குறிப்பிட்டார். அந்த லாட்ஜை விற்றுக் கொடுத்தால் கமிஷன் கிடைக்கும் என்ற காரணத்திற்காக புதிய மேயர் கோவிலை இடிக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இது குறித்து அளிக்கப்பட்ட மனுவில் லாட்ஜ் இருப்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவிர அப்பகுதியில் கோவில் இருப்பதையோ மேயரின் தலையீட்டையோ கோவிலை இடிக்க முயற்சிப்பதையோ குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...