கோவையில் பள்ளி மாணவனைக் கத்தியால் குத்திய மூன்று நபர்கள் கைது

கோவையில் எட்டாம் வகுப்பு மாணவன் மீது கத்தியால் தாக்குதல் நடத்தி செல்போன் பறிக்க முயன்ற மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். போலீஸ் தேடுதலின் போது ஒரு குற்றவாளி காயமடைந்தார்.


Coimbatore: கோவையில் பள்ளி மாணவன் ஒருவரைக் கத்தியால் குத்தி செல்போன் பறிக்க முயன்ற மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழங்கிய தகவல்களின் விவரம்:


கடந்த வியாழக்கிழமை இரவு பிடம்பள்ளிக்கு அருகில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் டியூஷன் முடித்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மூன்று மர்ம நபர்கள் கத்தியுடன் அவரைத் தாக்கி, செல்போனைப் பறிக்க முயன்றனர்.


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், குற்றவாளிகளைத் தேடி வந்தனர். விரைவில் ஐயப்பன் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மூன்றாவது குற்றவாளியான கண்ணனைத் தேடி வந்தனர்.


சூலூர் தனிப்படை போலீஸார் கண்ணனைப் பிடிக்கச் சென்றபோது, அவர் பள்ளத்தில் விழுந்து கையில் காயமடைந்தார். போலீஸார் அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


போலீஸ் விசாரணையில், கண்ணன் மீது 2021ஆம் ஆண்டு சூலூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...