கோவையில் 'போஷன் அபியான்' ஊட்டச்சத்து கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'போஷன் அபியான்' ஊட்டச்சத்து கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கண்காட்சியை தொடங்கி வைத்து, கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.



Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'போஷன் அபியான்' ஊட்டச்சத்து கண்காட்சி இன்று (செப்டம்பர் 2) நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30 வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, வாழைத் தண்டு மற்றும் வாழைப்பூவால் உருவாக்கப்பட்ட குத்துவிளக்கை ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். கண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர், செயல்முறை விளக்கங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவரது தலைமையில் தேசிய ஊட்டச்சத்து மாதத்திற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.



மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேசுகையில், "கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கன்வாடிகளில் ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன," என்று தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில், கர்ப்ப காலம் தொடங்கி குழந்தை பிறந்து இரண்டு வயது ஆகும் வரை உள்ள 1000 நாட்களின் முக்கியத்துவம் குறித்தும், இந்த நாட்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்க படங்களுடன் கூடிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், தடுப்பூசி அட்டவணை, ஊட்டச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள், ஊட்டச்சத்து மிக்க உணவுகள், செயல்முறை விளக்கங்கள், குழந்தைகள் முன் பருவக் கல்வி ஆகியவற்றிற்கான விளக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...