மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை முட்டி வீசிய மாடு: வைரலாகும் காணொளி

மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை மாடு முட்டி வீசியது. இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதி சாலைகளில் கால்நடைகள் சுதந்திரமாக உலவி வருவதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலை சங்கர் நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மாடு முட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) நடந்த இந்த சம்பவத்தில், வாகனத்தில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தின் காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனினும், சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவது குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...