விநாயகர் சதுர்த்தி: களிமண் சிலைகளை மட்டுமே நீரில் கரைக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக களிமண் சிலைகளை மட்டுமே குறிப்பிட்ட நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளைக் கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆட்சியரின் அறிவிப்பில், களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், நெகிழி மற்றும் தெர்மாகோல் கலவையற்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட சிலைகளை மட்டுமே நீரில் கரைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலைகளை தயாரிக்க அல்லது அலங்காரம் செய்ய வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவது குறித்தும் ஆட்சியர் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும், மாறாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கக் கூடிய, நச்சுக் கலப்பற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விழா தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை பொதுமக்கள் அணுகலாம் என்றும் ஆட்சியரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விழாவைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...