பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்க வேண்டும்: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கவலை தெரிவித்து, பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செப்டம்பர் 1 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமை, கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது, மலையாள திரைப்பட உலகில் நடிகைகளுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இது தொழில்நுட்ப யுகம். எது செய்தாலும் வெளியே தெரிந்து விடும். தப்பிக்க முடியாது என்று தெரிந்தும் தூய்மை பணியாளரில் இருந்து உயர் அதிகாரிகள் வரை பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது தொடர்கிறது. இந்த தைரியம் அவர்களுக்கு எப்படி வருகிறது?" என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும், உயர்ந்த பதவிகளில் இருந்தாலும், சில ஆண்கள் அவர்களை போகப் பொருளாகவே பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருச்சி என்.ஐ.டி.யில் படித்த மாணவிக்கு, கேபிள் வயர் பொருத்த வந்த ஒப்பந்த பணியாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தை உதாரணமாக குறிப்பிட்டுள்ளார்.

மலையாள திரைப்பட உலகில் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார். "எந்த இடத்தில் இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

"எதற்கும் பயப்படாமல், எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளாமல் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பெண்கள் புகார் அளிக்க வேண்டும். அவர்களுக்கு சட்டம் துணையாக இருக்கிறது" என்று வானதி சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவோர் யாரும் தப்பிவிடக் கூடாது என்றும், அவர்களுக்கு கிடைக்கும் தண்டனைதான் இனி அதுபோல வேறொருவர் செய்யாமல் தடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். நிறுவனங்களும், அரசும் பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...