வால்பாறை அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்: பேராசிரியர்கள் உட்பட 4 பேர் கைது

வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, பேராசிரியர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.



Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பேராசிரியர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் என்ற பொதுப் பெயரில் பெண்கள் ஆணையத்துக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, சமூக நலத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு வால்பாறை சென்று விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் போது, ஆறு மாணவிகள் தாங்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

விசாரணையில், தற்காலிக பேராசிரியர்களான சதீஸ்குமார் (39), முரளி ராஜ் (33), ராஜபாண்டி மற்றும் லேப் டெக்னீசியன் அன்பரசு (37) ஆகியோர் மாணவிகளிடம் முறையற்ற முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. இவர்கள் வாட்சப்பில் மாணவிகள் வைக்கும் ஸ்டேட்டஸ்களுக்கு முறையற்ற பதில்கள் அனுப்புவது, கையைப் பிடிப்பது, தொடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் DSO அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 75 (1) BNS., பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், வால்பாறை சரக DSP ஸ்ரீநிதி தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தற்காலிக பேராசிரியர்களான சதீஸ்குமார், முரளி ராஜ், லேப் டெக்னீசியன் அன்பரசு ஆகிய மூவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தலைமறைவாக இருந்த தற்காலிக பேராசிரியர் ராஜ பாண்டியையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம், சமீபத்தில் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவூட்டுகிறது. தொடர்ந்து மருத்துவமனைகள், விடுதிகள், கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவது கவலையளிக்கிறது.

கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...