கோவை சூலூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் 43-வது மாநாடு

கோவை சூலூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் 43-வது மாநாடு நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. தொழிலாளர்களின் நலனுக்காக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.


கோவை: கோவை சூலூர் கலங்கல் சாலையில் உள்ள புத்ததேவ் பட்டாச்சார்யா நினைவு அரங்கில் (எஸ்.ஆர்.எஸ் திருமண மண்டபம்) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் 43-வது மாநாடு ஆகஸ்ட் 31 அன்று நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் பிரான்சிஸ் மாநாட்டு கொடியை ஏற்றிவைத்து தலைமை உரையாற்றினார். உயிரிழந்த பணியாளர்களுக்கு அஞ்சலி தீர்மானத்தை இணைச் செயலாளர் எம்.சசிகுமார் முன்மொழிந்தார். உதவி தலைவர் சக்திவேல் வரவேற்புரை ஆற்றினார்.

சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துவக்க உரை நிகழ்த்தினார். சங்கத்தின் வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் சரவணன் முன்வைத்தார். பொருளாளர் ராஜேந்திரன் வரவு செலவு அறிக்கையை எழுத்துப்பூர்வமாக முன் வைத்தார்.

உதவி தலைவர் பாலகுமார், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் மத்திய அமைப்பின் உதவி தலைவர் ஐயப்பன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சங்க நிர்வாகி பிலிப்ஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், பத்து முக்கிய கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. அவை:

1. ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்குதல்

2. காலிப் பணியிடங்களை நிரப்புதல்

3. பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு உடனடியாக பணி வழங்குதல்

4. வாரிசு அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப பதவிகளை வழங்குதல்

5. எலக்ட்ரிக்கல் டிப்ளமோ படித்துள்ள மின்பணியாளர்களுக்கு கண்காணிப்பாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பதவிகளை வழங்குதல்

6. கூட்டுக் குடிநீர் திட்டங்களை பராமரிக்க அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு வாரியமே பராமரிப்பு பணிகளை நிர்வகித்தல்

7. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போலவே அகவிலைப்படி உயர்வை வாரிய பணியாளர்களுக்கும் வழங்குதல்

8. வாரியத்தில் பணி ஓய்வு பெற்ற நாளிலேயே ஓய்வு கால பலன்களை வழங்குதல்

குடிநீர் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரான்சிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்கள் கோரிக்கைகள் நியாயமானவை. அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்று, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...