கோவையில் ரூ.15.81 கோடி முதலீட்டு மோசடி: நிறுவன நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை

கோவையில் முல்லை குரூப் ஆஃப் கம்பெனி 387 முதலீட்டாளர்களிடம் ரூ.15.81 கோடி பெற்று மோசடி செய்தது. நிர்வாக இயக்குனர் குறிஞ்சிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.15.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: கோவை, காந்திபுரம் டாடாபாத் 7-வது வீதியில் முல்லை குரூப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என விளம்பரம் செய்தது.

இதை நம்பி ஏராளமான மக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், நிறுவனம் வாக்குறுதியளித்தபடி முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்காமல் ஏமாற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் 2019-ஆம் ஆண்டு கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளித்தனர்.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், மொத்தம் 387 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.15 கோடியே 81 லட்சத்து 35 ஆயிரம் முதலீடு பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த குறிஞ்சி என்கிற குறிஞ்சிநாதன் (42) மற்றும் நிறுவன ஊழியர்களான கதிர்வேல், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி, அருணாரெமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ஆகஸ்ட் 30 அன்று தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குறிஞ்சிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 கோடியே 91 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற நான்கு ஊழியர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

நீதிபதி, விதிக்கப்பட்ட அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட 387 முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்து வழங்க உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைத்ததாக கருதப்படுகிறது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...