உடுமலையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

உடுமலையில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. உடுமலை - மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டம் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



கூட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முக்கியமாக, கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அவர்களை டி பிரிவு பட்டியலில் சேர்க்க வேண்டும், கருணை அடிப்படையில் மறைந்த கிராம உதவியாளர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.



இந்நிகழ்வில் உடுமலை வட்டக் கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, வட்டத் தலைவராக கிரி, துணைத் தலைவராக மாரிமுத்து, செயலாளராக பரமேஸ்வரன், துணைச் செயலாளராக அழகிரி, பொருளாளராக கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதியாக பழனிச்சாமி மற்றும் திருமதி சுகந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் மாநில சங்க ஆலோசகர்களான மாரியப்பன், மகேந்திரன், திருப்பூர் மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட தணிக்கையாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மடத்துக்குளம் வட்ட நிர்வாகிகளான கருப்புசாமி, பொன்னுச்சாமி, ராஜலட்சுமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...