Update: பொள்ளாச்சி அருகே கார் விபத்து: இருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் படுகாயம்

பொள்ளாச்சி அருகே தாமரைக்குளம் பகுதியில் கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து. இதில் இருவர் உயிரிழந்தனர், ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

உடுமலை தீபாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலாஜி (28) என்பவர் தனது உறவினர் ஒருவரை கோவை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு மீண்டும் தீபாலப்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.



தாமரைக்குளம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, சாலையின் இடது புறமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பாலாஜியின் கார் மோதியது.



இந்த மோதலில் கார் நிலைதடுமாறி உருண்டு சென்றபோது, மேலும் மூன்று இருசக்கர வாகனங்கள் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் பட்டணம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



படுகாயமடைந்த ஐந்து பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாசநாயக்கன்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார் ஓட்டுனர் உள்ளிட்ட நான்கு பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



அதிகாலையில் நடந்த இந்த விபத்து காரணமாக பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...