கோவையில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்பி தொடங்கி வைத்தனர்

கோவையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் தொடங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் எம்பி கணபதி ராஜ்குமார் இவற்றைத் தொடங்கி வைத்தனர்.



Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளுக்கான சாவிகளை வழங்கி தொடங்கி வைத்தனர்.

இந்த ஊர்திகள் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளன. கால்நடைகளுக்கு மருத்துவ வசதி எட்டாத கிராமங்களுக்கும் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இவை செயல்படும்.



திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து கிராமங்களுக்கும் இந்த வாகனங்கள் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளன. மேலும், இந்த வாகனங்களில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் செய்யும் வசதிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மொத்தம் 1962 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த முயற்சி கிராமப்புற கால்நடை உரிமையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...