கோவையில் தொழில் முனைவோருக்கு ரூ.6.54 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கல்..!

கோவையில் நடைபெற்ற நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 46 தொழில் முனைவோருக்கு ரூ.6.54 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கினார். பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த உதவி வழங்கப்பட்டது.



Coimbatore: கோவை கொடிசியா கூட்டரங்கில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கோவை மற்றும் சேலம் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் வசதிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டமும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 46 நபர்களுக்கு ரூ.6.54 கோடி மானியம் வழங்கப்பட்டது.



அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், "கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எம்எஸ்எம்இ துறையில் 5,068 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், கடந்த எட்டு மாதங்களில் இதுவரை 1,645 நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மீதமுள்ள தொழில் தொடங்காத வங்கிக் கடன் பெற்ற தொழில் முனைவோர்களை இங்கு அழைத்து, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அதற்கான தீர்வு காண அனைத்துத் துறை அதிகாரிகளும் இங்கே அழைக்கப்பட்டுள்ளனர்," என்றார்.

மேலும் அவர், "கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில், இதுவரை ரூ.2,615 கோடியே 30 லட்சம் வங்கிக் கடன் தொழில் தொடங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது. 30,324 தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டு, 3 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.



தமிழக முழுவதும் சமச்சீரான தொழில் வளர்ச்சி ஏற்படுத்தி, அதிக தொழில் வளர்ச்சியை உருவாக்கி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற இலக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், தொழில் தொடங்குவதற்கான கடன் வழங்குவதை வங்கிகள் தட்டிக் கழிப்பதாக புகார் தெரிவித்தால், முதல்வர் தனி பிரிவிலிருந்து இயங்கும் துறை உடனடி நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் இத்துறையின் செயலாளர் அர்ச்சனா பட்நாயக், கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati, கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...