பொள்ளாச்சி: எறிபந்து போட்டியில் மண்டல அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள்

பொள்ளாச்சி அருகே கோட்டூரில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் பெத்தநாயக்கனுர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மண்டல அளவில் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் அரசு பள்ளியில் குறுவள மையத்தின் சார்பாக எறிபந்து போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் பெத்தநாயக்கனுர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மண்டல அளவில் முதலிடம் பிடித்தனர். இதன் மூலம் அவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளுக்குத் தேர்வாகி உள்ளனர். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இப்பள்ளி மாணவர்கள் இச்சாதனையைப் புரிந்துள்ளனர்.



உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்த போதிலும், மாணவர்களின் தொடர் முயற்சி, முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பால் இந்தச் சாதனை சாத்தியமானது. மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை தமிழாசிரியர் பாலமுருகன் வழங்கினார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த வெற்றி, அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையையும், கடின உழைப்பையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...