கோவை தடாகம் பகுதியில் கல்லூரி மாணவரிடம் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் கைது

கோவை தடாகம் பகுதியில் கல்லூரி மாணவரிடம் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் மாணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை தடாகம் பகுதியில் கல்லூரி மாணவரிடம் 2.5 கிலோ கஞ்சாவை தடாகம் போலிசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கல்லூரி மாணவர் ராகுல்(20) என்பவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



கோவை தடாகம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன் பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மேற்பார்வையிலான தனிப்படையினர் தடாகம் உதவி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் காவலர்கள் வீரமணி, பாலசுப்பிரமணி அடங்கிய குழுவினர் தடாகம் கணுவாய் பகுதியிலுள்ள கோழிப்பண்ணை சந்திப்பு அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த கல்லூரி மாணவரின் பையை சோதனை செய்தபோது அதில் 2.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் பெயர் ராகுல் என்பதும் அவர் கோவை மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.



இதையடுத்து அவரிடம் இருந்த 2.5 கிலோ கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்த தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...