மடத்துக்குளம் அருகே கணியூரில் தேனீக்கள் தாக்குதல்: 10க்கும் மேற்பட்டோர் காயம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் திடீர் தேனீக்கள் தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் பேருந்து நிலையம் பகுதியில் திடீரென பறந்து வந்த தேனீக்கள் கூட்டம் அங்கிருந்தவர்களை துரத்தி துரத்தி கொட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பள்ளிகள் முடிந்து மாணவ மாணவிகள் வீட்டுக்கு திரும்பும் வேளையில் இந்த சம்பவம் நடந்தது. பேருந்து நிலையத்தில் இருந்த மாணவர்களையும் தேனீக்கள் துரத்தி கொட்டியதால், குழந்தைகள் என்ன செய்வதென்று தெரியாமல் சாலைகளின் குறுக்கே அங்கும் இங்கும் ஓடினர்.

அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும் தேனீக்கள் விடாமல் கொட்டியது.



ஒரு முதியவரை தேனீக்கள் தேடித்தேடி கொட்டியதாகவும், அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற செல்ல முடியாத அளவிற்கு தேனீக்கள் சூழ்ந்ததாகவும் தெரிகிறது.

காயமடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு 10க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...