பொள்ளாச்சி ஒடையகுளம் நீர் பயனாளர் சங்கத் தேர்தல்: போட்டியின்றி தேர்வான தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்

பொள்ளாச்சி ஒடையகுளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலில் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா வெற்றி சான்றிதழ்களை வழங்கினார்.


Coimbatore: பொள்ளாச்சி ஆழியாறு அணை பாசன திட்டத்தில் உள்ள குளப்பத்துக் குளம் ஏரி மற்றும் வரத்து வாய்க்கால் ஒடையகுளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் மற்றும் நான்கு ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

கடந்த வியாழக்கிழமை இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கு விசாகபதி என்பவரும், ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிக்கு நீலகண்டன், சந்துரு, ராஜமாணிக்கம், கார்த்திகேயன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டவர்களை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், ஐந்து பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.



தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரும் பொள்ளாச்சி சார் ஆட்சியருமான கேத்தரின் சரண்யா வழங்கினார்.



அவர் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...