சூலூரில் 10 செண்ட் அரசு நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைப்பு

கோவை மாவட்டம் சூலூரில் 10 செண்ட் அரசு நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைத்தது. இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் நன்றி தெரிவித்தது. நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க கோரிக்கை.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டம் மார்க்கெட் ரோட்டில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகே அமைந்துள்ள அரசு நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைத்துள்ளது.



இந்த நிலம் சூலூர் கிராம புல எண். 704/5 (பழைய புல எண்.422/15) என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது 400 சதுர மீட்டர் (10 செண்ட்) பரப்பளவு கொண்ட சர்க்கார் புறம்போக்கு நத்தம் நிலமாகும்.



இந்த நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைத்ததற்கு அப்பகுதி பொதுமக்கள் சார்பாக இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் நன்றி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இடத்தை எதிர்காலத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க வேண்டும் என்றும், இந்த இடம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்பதை தெரிவிக்கும் வகையில் உடனடியாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தெரிவித்தார்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...