மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

கோவை நீதிமன்ற வளாகத்தில் மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தின் போது, வழக்கறிஞர்கள் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர். இச்சட்டங்கள் பொதுமக்களுக்கு எதிரானவை என்றும், காவல்துறைக்கு சாதகமானவை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.



கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், "கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல், இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ரயில் மறியல் போராட்டம், மத்திய அரசு அலுவலக முற்றுகை, உண்ணாவிரதப் போராட்டம், டெல்லியில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும். இன்று தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது," என்றார்.

மேலும் அவர், "அடுத்த மாதம் 30 ஆம் தேதி JAAC பொதுக்குழுவை கூட்டி, இந்திய அளவில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்க வாய்ப்புள்ளது," என்று தெரிவித்தார்.



இந்த மனித சங்கிலி போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று முடிவடைந்தது. புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராட்டங்களை நடத்த வழக்கறிஞர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...