சொந்த காரில் மது அருந்த வருபவர்களுக்கு ஓட்டுநர் வசதி: மது கூடங்களுக்கு கோவை காவல்துறை அறிவுறுத்தல்

கோவையில் மது கூடங்களுக்கு காவல்துறை புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாநகர காவல்துறை, மது கூடங்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சொந்த வாகனத்தில் வரும் மது பிரியர்கள் ஓட்டுநர்களுடன் வந்துள்ளனரா என்பதை மதுபானக் கூட நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மது அருந்திய ஒருவர் சொந்த ஓட்டுநர் இல்லாத நிலையில், அவருக்கு மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுபானக் கூட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் அடிப்படையில், ஓட்டுநர் ஒருவர் மது அருந்திய நபரை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், மது கூடத்திற்கு வரும் மது பிரியர்களின் வயதையும், அவர்கள் ஏதேனும் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மது கூடங்களுக்கு வெளியே சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால், அதற்கு மது கூடத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் கோவை மாநகர காவல் பகுதிகளில் மது போதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய வழிகாட்டுதல்கள் மூலம் மது அருந்தி வாகனம் ஓட்டும் சம்பவங்களை குறைக்க முடியும் என காவல்துறை நம்புகிறது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...