ஆனைகட்டி அருகே மண் சகதியில் சிக்கி பெண் காட்டு யானை பலி


கோவை மாவட்டம், ஆனைகட்டி அருகே அமைந்துள்ளது செம்பிக்கரை கிராமம். அடர்ந்த வனப்பகுதியின் அருகே அமைந்துள்ள இக்கிராமத்தில் நீர் மற்றும் உணவுக்காக காட்டு யானைகள் அவ்வப்போது வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக செம்பிக்கரையில் உள்ள நீர் குட்டைக்கு வந்துள்ளது. அப்போது குட்டையில் இருந்த நீர் வறண்டு மண் சகதியாக இருந்த நிலையில் யானை அதில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.



இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் ஜேசிபி வாகன உதவியுடன் யானையின் உடலை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, யானையின் உடல் அப்பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்யப்படும் என மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆனைகட்டி பகுதியிலேயே தண்ணீர் தேடி வந்த யானை உயிரிழந்தது. தொடர்ந்து, கோவை மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் உள்ள வனப்பகுதிகளில் தொடர்ந்து யானைகள் உயிரிழந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...