மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றங்கரையில் இளம்பெண் கொடூரமாக கொலை: போலீஸ் தீவிர விசாரணை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றங்கரையில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கை, கால், வாய் கட்டப்பட்டு நிர்வாணமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றங்கரையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து கிடைத்த தகவலின் பேரில் மடத்துக்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் கிடந்தது.



உடனடியாக பிணத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொல்லப்பட்ட பெண் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காணும் வகையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தகவல்கள் கிடைக்கப்பெற்றவுடன் தெரிவிக்கப்படும்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...