கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை

கோவை சர்வதேச விமான நிலையத்தில் சார்ஜாவிலிருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தில், சார்ஜாவிலிருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். தங்கம் கண்டுபிடிக்கப்படாததால், அவர்கள் விமானத்தின் உள்ளே சோதனை மேற்கொண்டனர். விமானத்தின் கால் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒட்டப்பட்டிருந்த பொருட்களை ஆய்வு செய்தனர்.



விமானத்தின் உள்பகுதியில் தங்க பிஸ்கட்டுகள் டேப்பால் சுற்றப்பட்டு, இரட்டை பக்க ஒட்டும் டேப்பால் உறுதியாக ஒட்டப்பட்டிருந்தன. 24 காரட் தூய்மையான தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1,399 கிராம் என்றும், அதன் மதிப்பு சுமார் ரூ.1.02 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.



பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...