தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக் கல்லூரியில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக் கல்லூரியில் வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புப் பட்டதாரிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம் ஆகஸ்ட் 24, 2024 அன்று நடைபெற்றது. மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.


கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஆகஸ்ட் 24, 2024 அன்று வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புப் பட்டதாரிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியது. பட்டதாரிகள் தொழில்முறைப் பாதையில் செல்ல மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் உத்திகளை வழங்குவதை கருத்தில் கொண்டு இந்த பட்டறை நடத்தப்பட்டது.



நிகழ்வின் முதன்மை விருந்தினர் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர் முனைவர் எஸ். வெங்கடேசன், ஐ.எஃப்.எஸ்., கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (காம்பா), பெங்களூரு, உரையாற்றுகையில், "வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகள் மிகவும் பரவலாக உள்ளன. மேலும் இந்த வாய்ப்பைப் பெறுவதற்கான போட்டித் திறனை வளர்க்க இதுபோன்ற தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் மூலம் பெறலாம்" என்று கூறினார்.



வனக்கல்லூரியின் முதன்மையர் முனைவர் அ.பாலசுப்ரமணியன் மாணவர்களை "வேலை தேடுபவர்களாக இருக்காதீர்கள், வேலை வழங்குபவர்களாக இருங்கள்" என்று வலியுறுத்தினார். மேலும், மாணவர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தை நிறுவி அதில் பல்வேறு பட்டதாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.



இந்நிகழ்வில் பங்கேற்ற புகழ்பெற்ற நிபுணர்கள், தொழில் ஆலோசகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள், வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புத் துறைகளில் உள்ள பல்வேறு தொழில் வாய்ப்புகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் தேவையான அத்தியாவசிய திறன்கள் குறித்து ஆழமான வழிகாட்டுதலை வழங்கினர். பயிலரங்கில் ஊடாடும் அமர்வுகள், குழு விவாதங்கள் மூலம் துறைகளில் தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகளை எதிர்கொள்ள தேவையான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வனவியல் பேராசிரியர் முனைவர் ஐ.சேகர் வரவேற்புரை ஆற்றினார். வனவியல் பேராசிரியர் முனைவர் எஸ்.உமேஷ் கண்ணா நிகழ்வை ஒருங்கிணைத்தார். வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அதன் பட்டதாரிகளின் தொழில்முறை வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும், அவர்கள் அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கும் உறுதியுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...