பல்லடத்தில் 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க திட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் வேதனை

பல்லடத்தில் அங்காளம்மன் கோயில் நிலத்தில் உள்ள 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள அங்காளம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற வேண்டிய பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அங்காளம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான மாணிக்கபுரம் சாலையில் உள்ள 12 ஏக்கர் நிலத்தை மீட்க அங்காளம்மன் கோயில் குழுவினர் இந்து அறநிலைத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வருவாய்த்துறை, இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



ஆனால், இந்து சமய அறநிலைத்துறையின் ஆய்வாளர் பேச்சுவார்த்தைக்கு வராததால், பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். இப்பகுதியில் வசிக்கும் சுமார் 120க்கும் மேற்பட்டோரின் வீடுகள் இடிக்கப்படும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்தனர்.



மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையிலும், வீடுகளை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால் தங்களின் நிலை மிகவும் துயரமாக உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...