பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவர்களுக்கு சிறுநீரக நோய் விழிப்புணர்வு

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 64 பள்ளி மாணவர்களுக்கு டயாலிசிஸ் பிரிவில் சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் சிறுநீரக நோய் காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினர்.


கோவை: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள டயாலிசிஸ் பிரிவில் சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் பொள்ளாச்சி சாந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த 64 மாணவர்கள் பங்கேற்றனர்.

பொது மருத்துவ துறை மற்றும் டயாலிசிஸ் பிரிவு தலைவர் மருத்துவர் வனஜா, மாணவர்களுக்கு சிறுநீரகம் செயலிழப்பது குறித்தும், அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் விரிவாக விளக்கினார். சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை பற்றியும் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.



சிறுநீரகம் செயலிழப்பதற்கான முக்கிய காரணங்களாக சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாமல் இருப்பது, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவற்றை மருத்துவர் வனஜா சுட்டிக்காட்டினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செவிலியர் கண்காணிப்பாளர் கௌரி மற்றும் டயாலிசிஸ் டெக்னீசியன் அனுசுயா ஆகியோரும் உடனிருந்தனர்.

பயிற்சியின் முடிவில், பள்ளி மாணவர்கள் இந்த அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...