பசுமை புரட்சியினை மேற்கொள்ளும் வைல்டு விங் டிரஸ்ட்

சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்பான வைல்டு விங் டிரஸ்ட், வன விலங்குகளை பாதுகாத்தல், சுற்றுப்புறத் சூலளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. மேலும், மலைவாழ் மக்களின் கல்விக்காகவும், இயற்கை குறித்தான விழிப்புணர்வையும் இந்த அமைப்பு பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது.

தற்போது, கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து பசுமை புரட்சியினை மேற்கொள்ள வைல்டு விங் டிரஸ்ட் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து வைல்டு விங் டிரஸ்ட் சரவணன் சிம்ப்ளிசிட்டி நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வைல்டு விங் டிரஸ்ட் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சுமார் 8000 ஆயிரம் செடிகளை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் வளர்த்து வருகிறோம். இதில் 23 வகைச் செடிகள் நம் நாட்டுச் செடிகள் ஆகும். இவை மூன்று மாதத்தில் சுமார் 6 அடி வரை வளர்ந்து விடும். 

பின் இதனை வரும் மழைக்காலத்தில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கல்லூரி வளாகத்தில் உள்ள 8 ஆயிரம் செடிகளுக்கும் குமரகுரு கல்லூரி நிர்வாகமே இடத்தினை ஒதுக்கி தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். 

எங்களது இந்த முயற்சிக்கு கல்லூரி நிர்வாகத்தினரும், வைல்டு விங் டிரஸ்ட் உறுப்பினர்களும் சிறந்த முறையில் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்" என்றார்.

வைல்டு விங் டிரஸ்ட்-யின் இந்த பசுமை புரட்சி முயற்சி வெற்றி பெறவும், இந்த பூவுலகம் பசுமையடைந்து வனமும் வளமும் பெறுக நமது சிம்ப்ளிசிட்டியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...