பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் காவல் ரோந்து பணி குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.


Coimbatore: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயன், பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் காவல்துறையினருடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில் கட்டிடங்களுக்கு பின்புறம் எங்கெல்லாம் அதிக விளக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது, எங்கெல்லாம் கூடுதலாக சிசிடிவி கேமரா தேவைப்படுகிறது என்று ஆய்வு செய்தனர். கூடுதலாக எந்த இடத்தில் எல்லாம் சிசிடிவி வைக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டது.



மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் இரவு நேரத்தில் செல்லும் பகுதிகளில் எங்கே கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. பிண ஆய்வு நடைபெறும் இடத்தில் கூடுதலாக காவல்துறையினர் தேவைப்பட்டால் காவல் நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கும்படி அறிவுரை வழங்கினார்.



அவசர சிகிச்சை பகுதியில் அதிகமாக காவல் துறையினர் தேவைப்படும் நேரத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து கூடுதலாக காவலர்களை அனுப்பி வைக்கும்படி அறிவுரை வழங்கினார். மருத்துவமனையில் செயல்பட்டு வரும் புற காவல் நிலையத்தில் அதிகமாக காவல் துறை ஊழியர்கள் தருவதாக உறுதி அளித்தார்.



இரவு நேர காவல் ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் இரண்டு அல்லது மூன்று முறை மருத்துவமனை வளாகத்திற்கு வந்து செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மருத்துவமனையில் இருந்து புகார் வந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து உடனடியாக காவல்துறையினர் வந்து விசாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...