அவினாசி அத்திகடவு திட்டம்: பாஜக பெருமை கொள்வது நியாயமற்றது - கொமதேக தலைவர் ஈஸ்வரன் விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கொமதேக தலைவர் ஈஸ்வரன், அவினாசி அத்திகடவு திட்டத்தில் பாஜகவின் பங்களிப்பு இல்லை என்றும், மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை என்றும் விமர்சித்தார்.



Coimbatore: கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் (கொமதேக) தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் அவினாசி அத்திகடவு திட்டம் குறித்து பேசினார்.

அவினாசி அத்திகடவு திட்டம் 60 ஆண்டு கால போராட்டத்தின் விளைவு என்றும், 2009-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி இத்திட்டத்திற்கு ஆய்வு செய்ய உத்தரவிட்டதாகவும் ஈஸ்வரன் கூறினார். அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் இத்திட்டத்தை கவனிக்கவில்லை என்றும், கொமதேக தொடர்ந்து போராட்டங்களை நடத்தியதன் விளைவாக 2016-ல் அதிமுக அரசு ஆய்வுக்கு 3 கோடி ஒதுக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.



"அவினாசி அத்திகடவு திட்டத்தின் 67 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவு பெற்றிருந்தது. எடப்பாடியார் இந்த திட்டத்தை துவங்கியதற்கு அனைத்து தரப்பு சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்," என்று ஈஸ்வரன் கூறினார். தற்போதைய திமுக அரசு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் பாராட்டினார்.

பாஜக தலைவர்களின் கூற்றுகளை விமர்சித்த ஈஸ்வரன், "ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கு ஒரு பைசா கூட நிதி தரவில்லை. ஆனால் பாஜக தலைவர்கள் தாங்கள்தான் இத்திட்டத்தைக் கொண்டு வந்ததுபோல் பேசுகின்றனர். பெருமையில் மட்டும் பங்கு கேட்கின்றனர்," என்றார்.

மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவற்றிற்கு பாஜக எந்த முன்னேற்றமும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய ஈஸ்வரன், "பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு 4.5 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். வாக்குறுதிகளை நிறைவேற்ற உங்கள் பிரதமரிடம் பேசி திட்டங்களை வாங்கிக் கொடுங்கள்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...