கோவையில் போலி காவல்துறை அதிகாரியாக நடித்து மோசடி: துப்பாக்கி, லத்தி உட்பட பல பொருட்கள் பறிமுதல்

கோவை மாச்சேகவுண்டன் பாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். வீட்டில் இருந்து காவல்துறை அடையாள அட்டை, துப்பாக்கி, லத்தி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



Coimbatore: கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே உள்ள மாச்சேகவுண்டன் பாளையத்தில் போலி காவல்துறை அதிகாரியாக நடித்து மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாச்சேகவுண்டன் பாளையத்தில் வசிக்கும் தினேஷ் என்பவரின் வீட்டில் மூன்று மாதங்களுக்கு முன்பு வீரபத்திரன் என்பவர் வாடகைக்கு குடியேறினார். அப்போது அவர் தனது ஆதார் அட்டை நகல் மற்றும் தனது சகோதரர் வினு என்பவரின் காவல்துறை அடையாள அட்டை நகலை கொடுத்துள்ளார்.



சில நாட்களுக்கு முன்பு, தினேஷ் அப்பகுதியில் உள்ள கோவிலில் வினுவை சந்தித்தார். வினு தன்னை அமைச்சருக்கு பாதுகாப்பு பணியில் இருப்பதாகவும், அரசு வேலை வாங்கித் தர முடியும் என்றும் கூறினார். இதற்கு 2 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி தினேஷ் வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் வெளியே பொருட்கள் சிதறிக் கிடந்தன. வீட்டை திறந்து பார்த்தபோது, உள்ளே கைத்துப்பாக்கி, காவல்துறையினர் பயன்படுத்தும் லத்தி, மெட்டல் டிடெக்டர், தமிழ்நாடு காவல்துறை என அச்சிடப்பட்ட அடையாள அட்டை ஆகியவை இருந்தன.



இதனையடுத்து, தினேஷ் இந்த பொருட்களை மதுக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், வினு மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஏற்கனவே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 34 வயதான வினு கைது செய்யப்பட்டார். வீரபத்திரனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...